Friday 5 June 2009 | By: Menaga Sathia

அவரை - சோள உசிலி

தே.பொருட்கள்:

அவரைக்காய் -100 கிராம்
சோளமுத்துக்கள் - 1 கப்
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
துவரம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
பெருங்காயப்பொடி - 1/4 டீஸ்பூன்

தாளிக்க:

கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது

செய்முறை:

*அவரைக்காயை பொடியாக நறுக்கி வேகவைத்து நீரை வடிகட்டி வைக்கவும்.

*சோளகுத்துக்களையும் சிறிது உப்பு போட்டு வைக்கவும்.

*துவரம்பருப்பு+கடலைப்பருப்பு+காய்ந்த மிளகாய் 30 நிமிடம் ஊறவைக்கவும்.

*ஊறவைத்த பருப்புடன்+பெருங்காயப்பொடி+வேகவைத்த சோளத்துடன் சேர்த்து அரைக்கவும்.

*கடாயில் எண்ணேய் ஊற்றி தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து அரைத்த விழுதை சேர்த்து நன்றாக உதிரியாக வரும் வரை எண்ணெய் விட்டு கிளறவும்.

*பின் இதனுடன் வேக வைத்த அவரைக்காய்+ தேவையான உப்பு சேர்த்து மேலும் நன்கு கிளறி இறக்கவும்.

*இந்த உசிலி சுவையும்,மணமும் ரொம்ப நல்லாயிருக்கும்.

3 பேர் ருசி பார்த்தவர்கள்:

லதானந்த் said...

உங்க ஊட்டுக்காரரு குடுத்துவெச்சவருங்க!

பூச்சரம் said...
This comment has been removed by a blog administrator.
Menaga Sathia said...

தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி லதானந்த்!!

01 09 10